மகனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தாயின் கள்ளக்காதலன்...!
mother's lover sexually harassed son
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் காட்டூர் சக்தி நகர் 3-வது கிராஸ் பகுதியை சேர்ந்தவர் சரவணன். இவர் டி.வி., வாஷிங்மெஷின், குடிநீர் சுத்திகரிப்பு எந்திரம் போன்றவற்றை பழுது நீக்கும் பணியை செய்து வருகிறார்.
இந்நிலையில், காட்டூர் பாலாஜி நகர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் வாஷிங் மெஷின் பழுது நீக்க சென்றார் . அந்த வீட்டின் உரிமையாளர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருக்கிறார். அந்த வீட்டில், அவரது மனைவியும், பிளஸ்-1 படிக்கும் மகனும் மட்டுமே இருந்தனர். அந்த வீட்டிற்கு வாஷிங் மெஷின் பழுது பார்க்க சென்றபோது, அந்த மாணவனின் தாயாருக்கும், பழுது பார்க்க சென்ற சரவணனுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. அடிக்கடி சந்தித்த அவர்களின் பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது.
மேலும், சரவணன் அந்த வீட்டிற்கு வாரத்தில் 2, 3 நாட்கள் சென்று மாணவனின் தாயாரிடம் உல்லாசமாக இருந்து வந்ததாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த பிப்ரவரி மாதம் 22-ந் தேதி வழக்கம்போல் மாணவன் வீட்டுக்கு சரவணன் வந்துள்ளார். வீட்டில் அவரது தாயாரும் இருந்த நிலையில், சரவணன் அந்த மாணவனின் ஆடைகளை கழற்ற சொல்லி பாலியல் தொல்லையை ஏற்படுத்தினார். இதனால் அந்த மாணவன் ஒரு வித மன இருக்கத்துக்கு ஆளாகினான்.
இதையடுத்து, அவனது தந்தை சில தினங்களுக்கு முன்பு வெளிநாட்டிலிருந்து ஊருக்கு வந்தார். அப்போது தனது மகன் வழக்கத்துக்கு மாறாக அமைதியாக இருப்பதை பார்த்து அவருக்கு சந்தேகம் ஏற்பட்டது. தந்தை அவனை விசாரித்த போது, தாயின் உதவியுடன் சரவணன் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததை தெரிவித்துள்ளான். இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த தந்தை மகன் மூலமாக திருவெறும்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.
இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி, மாணவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சரவணன் மற்றும் அவனது தாய் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மகனுக்கு ஏற்பட்ட பாலியல் ரீதியான தொந்தரவுக்கு தாயே உடந்தையாக இருந்தது அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
mother's lover sexually harassed son