மகளை திருமணம் செய்து கொடுத்தவிட்டு, வீட்டில் தனியாக இருந்த தாய் செய்த காரியம்.!  - Seithipunal
Seithipunal


வத்தலகுண்டு அருகே சங்கி கோவிலைச் சேர்ந்த பாண்டி என்பவருக்கு சாந்தி என்ற மனைவியும் 2 மகள்களும் இருந்துள்ளனர். 20 வருடங்களுக்கு முன்னதாகவே பாண்டி இறந்துள்ளார். இதனை தொடர்ந்து சாந்தி வீட்டு வேலை செய்து அவரது மகளை வளர்த்து வந்துள்ளார். பத்து வருடங்களுக்கு முன்பே தன்னுடைய மூத்த மகளுக்கு திண்டுக்கல்லில் மாப்பிள்ளை பார்த்து திருமணம் செய்து வைத்து இருக்கின்றார்.

அதன் பின்னர், கடந்த எட்டாம் தேதி இரண்டாவது மகளுக்கும் திருமணம் செய்துள்ளார். திருமணம் முடிந்து அவரது மகளை கணவர் வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளார். வீட்டில் தனிமையில் இருந்த சாந்தி தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து தற்கொலை செய்து கொண்டு இருக்கின்றார்.

பூட்டி கிடந்த வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியதன் காரணமாக அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் வத்தலகுண்டு காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். பின்னர் விரைந்து வந்த காவல்துறையினர் கதவை உடைத்து உள்ளே சென்றனர். அங்கே சாந்தியின் உடல் கருகிய நிலையில் கிடந்துள்ளது.

அவரது உடலை கைப்பற்றிய காவல்துறையினர் வத்தலக்குண்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மகளின் திருமணத்திற்காக சிலரிடம் அவர் கடன் வாங்கி இருந்ததாகவும், அதனை எப்படி அடைக்கப் போகிறோம் என்று தெரியாமல் தற்கொலை செய்து இருக்கலாம். என காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

mother suicide in home


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->