பிறந்து சில நிமிடமேயான குழந்தைக்கு ஏற்பட்ட சோகம்.! இரக்கமற்ற தாய் செய்த காரியம்.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் கடலூர் மாவட்டம் சிதம்பரம் அரசு மருத்துவமனை வளாகத்தில் அனாதையாக கைவிடப்பட்ட குழந்தை அதுவும் பிறந்து சில நிமிடங்களே ஆன அழகான பச்சிளம் பெண் குழந்தை மீட்டெடுக்க பட்டது.

சிதம்பரம் அரசு மருத்துவமனையில் நீர்தேக்க தொட்டி அருகில் பொட்டலம் போன்று சுற்றப்பட்ட ஒரு பை இருந்தது. அதை ஊழியர்கள் பிரித்து பார்த்தபோது, தொப்புள் கொடி கூட அகற்றப்படாமல், பிறந்து சில நிமிடங்களேயான அழகான பெண் குழந்தை துடித்துக்கொண்ட நிலையில் இருந்தது.

செவிலியர்கள் அந்த குழந்தையை மீட்டு, பிரசவ வார்டில் அனுமதித்து தொப்புள்கொடியை அகற்றி சுத்தம் செய்து சிகிச்சை அளித்து இங்குபேட்டரில் பாதுகாப்பாக வைத்தனர். பெண்ணாக பிறந்ததால் குழந்தையை அனாதையாக விட்டுச்சென்றாரா அல்லது வேறு காரணமா என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தொடர்ந்து மருத்துவமனையில் உள்ள சிசிடிவி கேமராக்களின் பதிவுகளை போலீசார் ஆய்வு செய்துவருகிறார்கள். இதற்கிடையே குழந்தையை கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்க ஆலோசிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

mother left her new born baby


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->