பணம் கேட்டு தொல்லை செய்த மகன்.. கூலிபடையை ஏவி கொலை செய்த தாய்..! - Seithipunal
Seithipunal


பணம் கேட்டு தொல்லை செய்த மகனை தாயே கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டம் கன்னியாகுடியை சேர்ந்த சதீஷ்குமார். இவர் திருமணமாகி லோகேஸ்வரி என்றா மனைவியும் பிரபஞ்சனா  என்ற மகளும் உள்ளனர். இவர் சொந்தமாக லாரி வைத்திருந்தார். அவரை காணவில்லை என அவரது அண்ணன் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

இந்த புகாரை அடுத்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில், சதீஷ்குமார் என்பவர் வடக்கு ஈச்சம்பட்டி உள்ள வறட்டு ஏரியில் கடந்த 9ம்ந்தேதி கைகால்கள் கட்டப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி விசாரணை மேற்கொண்டனர். சதீஷ்குமார் கடைசியாக அவரது நண்பர்களுடன் மது அருந்த சென்றது தெரியவந்தது. இதனை அடுத்து, அவர்களை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.

அவர்களை பிடித்து விசாரணை மேற்கொண்டதில் அவரது தாய் கொலை செய்ய சொன்னது தெரியவந்தது. அவரை கைது செய்த விசாரணை மேற்கொண்டதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன.

மதுவுக்கு அடிமையான அவர் சொத்தில் உங்க பங்கை குடித்தே அழித்துவிட்டு தாயிடம் பணம் கேட்டு தொல்லை செய்து வந்துள்ளார். இதனால், ஆத்திரமடைந்த அவர் கூலிபடையிடம் பணம் கொடுத்து கொலை செய்ய சொன்னதை ஒப்பு கொண்டுள்ளார். இந்த வாக்குமூலத்தை அடுத்து அவரை கைது செய்த காவல்துறையினர் விசாரணை  மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Mother Kills his Son Near Trichy


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->