மது பழக்கம் அடிமையான கணவன்.. மன உளைச்சலில் குழந்தைகளை கொன்ற தாய்..!
Mother killed his Children
குடும்ப தகராறு காரணமாக 2 குழந்தைகளை கொலைச் செய்த தாயை காவல்துறையினர் கைது செய்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம், கருப்பர்கோவில்பட்டியை சேர்ந்தவர் பொன்னடைக்கண் . இவருக்கு திருமணமாகி பஞ்சவர்ணம் என்ற மனைவியும் 2 குழந்தைகளும் உள்ளன்னர். பொன்னடைக்கண்னுக்கு மது அருந்தும் பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இதனால், கணவன் மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. பஞ்சவர்ணத்தின் உறவினர்கள் அவர்களை சமாதானம் செய்து வைத்துள்ளனர். இந்நிலையில், வீட்டிலிருந்த பஞ்சவர்ணம் கணவனின் குடிப்பழக்கத்தை அறிந்து மன உளைச்சலில் இருந்துள்ளார்.
இதனை அடுத்து, இரு குழந்தைகளின் கழுத்தை நெறித்து கொலை செய்துவிட்டு அவரது தாய்க்கு தெரிவித்துள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த அவர் அங்கு வந்து பார்த்த போது குழந்தைகள் சடலமாக கிடந்தது.
இதுகுறித்து, காவல்துறைக்கு தகவல் அளிக்கபட்டது. விரைந்து வந்த காவல்துறையினர் குழந்தைகளின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பஞ்சவர்ணத்தை விசாரித்ததில் அவர் குழந்தைகளை கொலை செய்ததை ஒப்புகொண்டதை அடுத்து அவரை கைது செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
Mother killed his Children