மது குடிப்பதை கண்டித்த மகன்கள்.! தாய் எடுத்த விபரீதம் முடிவு.! - Seithipunal
Seithipunal


சேலம் மாவட்டத்தில் மது குடிப்பதை மகன்கள் கண்டித்ததால் தாய் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சேலம் மாவட்டம் வேல கவுண்டம்பட்டி பகுதியை சேர்ந்தவர் பழனிச்சாமி. இவரது மனைவி சரோஜா (48). இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்ததால் அடிக்கடி மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார். இதனை சரோஜாவின் மகன்கள் கண்டித்துள்ளனர்.

இதனால் மன வேதனையடைந்த சரோஜா வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளார். ஆனால் வெகு நேரம் ஆகியும் சரோஜா மீண்டும் வீட்டிற்கு வராததால் குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடினர். அப்பொழுது அப்பகுதியில் உள்ள கிணற்றில் சரோஜா பிணமாக கிடந்துள்ளார்.

இதையடுத்து இந்த சம்பவம் குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த தகவலையெடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் சரோஜாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இதைத்தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் சரோஜா கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. மேலும் இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Mother commits suicide in salem


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->