கணவன் இறந்த துக்கத்தில் குழந்தைகளை கொன்றுவிட்டு மனைவி எடுத்த விபரீத முடிவு..! - Seithipunal
Seithipunal


கணவன் இறந்த துக்கத்தில் இரண்டு குழந்தைகளின் தாய் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சை மாவட்டம் வெண்டியம்பட்டி பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார் சத்யா தம்பதியினர்.  இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். விஜயகுமார் உடல்நலக்குறைவால் உயிரிழந்த கணவன் இறந்த துக்கத்தில் சத்யா மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், வயலுக்கு தெளிக்கும் பூச்சிக் கொல்லி மருந்துகளை கொடுத்து விட்டு அவரும் குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். அவரது மகன் வீட்டில் இருந்து வெளியே வந்து வாங்கி வைத்திருக்க அக்கம்பக்கத்தினர் அங்கு சென்று பார்த்தபோது கையில் பூச்சிக்கொல்லி மருந்தை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

உடனடியாக மூவரையும் ஈட்டுவார்கள் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி சத்யாவின் இரு மகன்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கணவன் இறந்த துக்கத்தில் இரண்டு குழந்தைகளுடன் மனைவி தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Mother attempts suicide after killing 2 children near thanjavur


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->