கோவிலுக்கு சென்ற தாய்-மகன் விபத்தில் பரிதாபமாக உயிரிழப்பு.!
Mother and son died in the accident in virudhunagar
விருதுநகர் மாவட்டத்தில் கோவிலுக்கு சென்ற தாய்-மகன் விபத்தில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஈரோடு மாவட்டம் சித்தோடு பகுதியை சேர்த்தவர் கண்ணன். இவரது மனைவி முத்துலட்சுமி (55). இவர்களது மகன் மவுலி(25). இவர்கள் அனைவரும் நேற்று திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு சாமி கும்பிடுவதற்காக வாடகை காரில் சென்று கொண்டிருந்தனர்.
அப்பொழுது அக்ரஹாரப்பட்டி அருகே சென்றபோது திடீரென கார் தடுப்பு சுவரின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் முத்துலட்சுமி மற்றும் அவரது மகன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
மேலும் கண்ணன் மற்றும் கார் ஓட்டுநர் ஆகியோர் படுகாயமடைந்த நிலையில், அப்பகுதியில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக விருதுநகர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இதையடுத்து இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த வச்சகாரப்பட்டி போலீசார், உயிரிழந்த தாய், மகன் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
Mother and son died in the accident in virudhunagar