கன்னியாகுமரி: குடும்பதகராறால் கொலை..!! தாய் மகன் கைது...!!
Mother and Son arrested due to killing his reletive
கன்னியாகுமரி மாட்டம் குலசேகரம் தும்பகோடு சானல்கரையைச் சேர்ந்தவர் சுரேஷ். இவருக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ளனர். சுரேஷ்க்கு ராஜா என்ற அண்ணன் இருக்கிறார். இந்நிலையில், சம்பவத்தன்று சுரேஷ் குடித்து விட்டு அண்ணன் ராஜா வீட்டிற்கு சென்று தகராறில் ஈடுப்படுள்ளார்.
அங்கு ராஜா இல்லாத நிலையில் அவரது மனைவி விஜிலா மற்றும் ராஜாவின் மகன் ஆட்லின் ரியாஸ் இருவரிடமும் தகராறில் ஈடுப்பட்டார். அங்கிருந்து சுரேஷை விரட்ட விஜிலா வெந்நீரை ஊற்றியுள்ளார். இதனால் ஆத்திரத்தில் தகாத வார்த்தைகளால் பேசியுள்ளார். ஒருகட்டத்தில் வாக்குவாதம் முற்றவே ஆட்லின் ரியாஸ் கத்தியால் சித்தப்பா சுரேஷ் சரமாரியாக குத்தியுள்ளார்.
இதில் சம்பவ இடத்திலேயே சுரேஷ் உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனையடுத்து விஜிலா மற்றும் ஆட்லின் ரியாஸ் காவல்துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Mother and Son arrested due to killing his reletive