தாயும் காதலனும் சேர்ந்து செய்த கொடூரம்.,துடிதுடித்த குழந்தை.,அரங்கேறிய சோகம்.!
mother and her lover killed little baby
தமிழ்நாட்டில் திருவண்ணாமலை மாவட்டம் அருகே, குழந்தை பிறந்து 2 நாட்கள் ஆன நிலையில் தாயும் அவரது காதலனும் துடிதுடிக்க கொன்றனர். இதனால் இருவரையும் காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் குமார். இவர் கூலி தொழிலாளி ஆவர். குமாரின் மனைவி சோலையம்மாள், இவர்கள் இருவருக்கும் ஏற்கனவே நான்கு பிள்ளைகள் இருக்கிறார்கள். இந்த நிலையில் கடந்த 14ஆம் தேதி மருத்துவமனையில் ஐந்தாவதாக பெண் குழந்தை ஒன்று பிறந்தது.
ஆனால் 16ம் தேதி மருத்துவமனையில் இருந்து சோலையம்மாள் தலைமறைவாகியுள்ளார், இதனால் மருத்துவர் ஆனந்தன் ஆரணிக்கு கிராமிய காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார்.
அதன் அடிப்படையில், தாயைத் தேடி வந்த காவல்துறையினர் சென்னையில் அவரது காதலரான குமாரின் அண்ணன் பாபுவை கண்டுபிடித்தனர். பின்னர், விசாரணையில் முறையற்ற உறவில் பிறந்த குழந்தை என்பதால் கொன்று விட்டதாக கூறியிருக்கிறார். மேலும், அதை விளை நிலத்தில் புதைத்து விட்டதாக தெரிவித்திருக்கிறார். இதன் காரணமாக இருவரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
English Summary
mother and her lover killed little baby