பள்ளிக்கு சென்ற குழந்தைகள் திரும்பி வந்ததும்.. வீட்டில் கண்ட அதிர்ச்சி காட்சி.! - Seithipunal
Seithipunal


கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள வேப்பனஹள்ளி பகுதியில் ஹைதரலி என்ற நபர் தனது மனைவி ஷானுமா மற்றும் குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார். ஹைதர் அலிக்கு ஒரு மகன் மற்றும் நான்கு பெண் குழந்தைகள் இருந்துள்ளனர். 

இவர்கள் இருவரும் பை தயாரிக்கின்ற தொழில் செய்து வந்துள்ளனர். நேற்று, காலையில் வழக்கம் போல பள்ளிகளுக்கு குழந்தைகளை அனுப்பி வைத்துவிட்டு இருவரும் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்துள்ளனர். இதை அடுத்து, குழந்தைகள் பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்தபோது தாய் தந்தை இருவரும் பிணமாக தூக்கில் தொங்கினர்.

இதை கண்டு குழந்தைகள் அதிர்ச்சி அடைந்து கத்தி கூச்சலிட்டனர். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து போலீசுக்கு தகவல் கொடுத்தனர். இந்த தகவலின் பேரில் விரைந்து வந்த போலீஸ் இருவருடைய உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

கடன் நெருக்கடியில் தாய், தந்தை இருவரும் தவிர்த்து வந்ததால் தற்கொலை செய்து கொண்டார்களா அல்லது வேறு ஏதாவது பிரச்சனையா என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Mother And Father Suicide In Krishnakiri


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->