பெரம்பலுர்: தாயும், மகளும் தனித்து இருந்த வீட்டில், உறவினர் கண்ட கொடூரக்காட்சியால் பரபரப்பு.! - Seithipunal
Seithipunal


பெரம்பலூர் அருகே இருக்கும் அய்யலூர் என்ற கிராமத்தில் வசித்தது வந்த ராணி (65) என்பவருக்கு ராஜேஸ்வரி என்ற மகள் இருந்துள்ளார். ராஜேஸ்வரிக்கு அதே ஊரிலேயே திருமணம் ஆகி இருந்தது. இந்த நிலையில், அவருடைய கணவர் வெளிநாட்டில் வசித்து வருகின்றார்.

இதன் காரணமாக தன்னுடைய தாயாருடன் வசித்து வந்துள்ளர். ராஜேஷ்வரி. இந்நிலையில் தாயும், மகளும் வசித்து வந்த அதே வீட்டில் இருவரின் சடலமும் கிடந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த ராணியின் உறவினர்கள் உடனடியாக பெரம்பலூர் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

உடனடியாக விரைந்து வந்த அவர்கள் வீட்டில் கிடந்த சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அதன் பின் இதுகுறித்து காவல்துரையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் அவர்கள் இருவரும் ஒன்றாக தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது.

அவர்கள் இருவரும் எதனால் தற்கொலை செய்து கொண்டனர். எவருடைய தூண்டலின் பேரிலாவது தற்கொலை செய்து கொண்டனரா என்பது குறித்து பெரம்பலூர் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

mother and daughter suicide in perambalur


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->