கள்ளக்காதலி மீது எல்லையற்ற மோகம், மகளிடம் தந்தை செய்த காரியம்.! அனல் பறக்க நேர்ந்த விபரீதம்.!
mother and Daughter killerd father in namakkal
தமிழகத்தின் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள சேந்தமங்கலம் அருகேயுள்ள புதன்சந்தை பகுதியில் இருக்கும் கலங்காணி பகுதியை சார்ந்தவர் கந்தசாமி (வயது 45). இவர் கட்டிட தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இவரது மனைவியின் பெயர் அங்கம்மாள். இவர்கள் இருவருக்கும் சாந்தி என்ற மகள் இருக்கிறார். அங்கம்மாவுடைய பெற்றோரின் இல்லம் இப்பகுதியில் இருக்கும் நிலையில், நேற்றிரவு அங்கம்மாள் தனது மகளான சாந்தியை அழைத்துக்கொண்டு பெற்றோரின் இல்லத்திற்கு சென்றுள்ளார்..
வீட்டில் கந்தசாமி மட்டும் தனியாக இருந்து வந்த நிலையில், இவரது வீட்டிற்கு முன்புறம் உள்ள கட்டிலில் படுத்து உறங்கியுள்ளார். இந்நிலையில், நள்ளிரவு நேரத்தில் அங்கு வந்த மர்ம நபர்கள் கந்தசாமியின் மீது பெட்ரோலை ஊற்றி தீவைத்துள்ளனர். உடல் முழுவதும் தீப்பற்றி எரிந்த நிலையில், வீட்டில் இருந்த இரு சக்கர வாகனமும் தீக்கு இரையாக்கப்பட்டுள்ளது. கந்தசாமி அலறித்துடித்த நிலையில், இவரை மீட்ட அக்கம் பக்கத்தினர் அங்குள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த விசாரணையில், கந்தசாமியின் மனைவி அங்கம்மாள் மற்றும் மகள் சாந்தியிடம் காவல் துறையினர் மேற்கொண்ட விசாரணையில் முன்னுக்கு பின்னான தகவல் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து இருவரிடமும் காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டதில் கொலைக்கான காரணம் வெளிவந்துள்ளது.
கந்தசாமி கொத்தனாராக பணியாற்றி வருகிறார். இவர் தினமும் கட்டிட பணிக்கு சென்று வந்த நிலையில், இவருடன் சேலத்தை சார்ந்த பெண்மணி சரோஜா என்பவர் சித்தாளாக பணியாற்றி வந்துள்ளார். இவர்கள் இருவருக்கும் இடையே ஏற்பட்ட பழக்கம் பின்னாளில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. இதனையடுத்து இந்த விஷயம் எனக்கு தெரியவந்தது. எனது கணவரிடம் பலமுறை கள்ளத்தொடர்பை கைவிட கூறி சொல்லியும் கண்டுகொள்ளாது இருந்தார். இந்த நேரத்தில், எனது பெயரில் இருக்கும் சொத்துக்களை கள்ளகாதலியின் பெயருக்கு மாற்றி எழுதி தரக்கூறி தொல்லை செய்தார்.
இதனால் தினமும் எங்களுக்குள் தகராறு ஏற்பட்டு வந்த நிலையில், எனது மகளிடம் சொத்துக்களை மாற்றி எழுதி தரக்கூறி பிரச்சனை செய்து வந்தார். இந்த சமயத்தில் தனக்கு சரோஜாவுடன் வாழ்க்கை அமைத்துக்கொள்ள விரும்புகிறேன் என்று தெரிவித்ததை அடுத்து, நானும் எனது மகளும் கந்தசாமியை பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை செய்தோம் என்று தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
mother and Daughter killerd father in namakkal