காஞ்சிபுரம் அருகே சோகம்.! லாரி சக்கரத்தில் சிக்கி தாய்-மகள் உயிரிழப்பு - Seithipunal
Seithipunal


காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில், லாரி சக்கரத்தில் சிக்கி தாய்-மகள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் ஓரிக்கை பேராசிரியர் நகர் பகுதியை சேர்ந்தவர் பழனி. இவரது மனைவி வித்யா (40). இவர்களுக்கு பூர்ணிமா (4) பூர்விகா(4) என்று இரண்டு மகள்கள் உள்ளனர்.

இந்நிலையில் இன்று அதிகாலை உறவினர் வீட்டு மஞ்சள் நீராட்டு விழா நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக பழனி, தனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் ஒரே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.

அப்பொழுது காந்திநகர் பகுதியில் சென்ற போது ஓரிக்கை நோக்கி வந்த லாரி ஒன்று எதிர்பாராத விதமாக இரு சக்கர வாகனம் மீது மோதியது. இந்த விபத்தில் லாரி சக்கரத்தில் சிக்கி வித்யா மற்றும் அவரது மகள் பூர்ணிமா ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உடன் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

மேலும் பழனி மற்றும் அவரது மற்றொரு மகள் பூர்விகா ஆகியோர் பலத்த காயமடைந்த நிலையில், அவழியாக சென்றவர்கள் மீட்டு சிகிச்சைக்காக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இதையடுத்து இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் உயிரிழந்த தாய்-மகளின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விபத்தை ஏற்படுத்தி விட்டு தப்பி ஓடிய லாரி ஓட்டுநரை தேடி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Mother and daughter killed in lorry collision in kanchipuram


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->