துணிதுவைக்க சென்ற தாய், மகளுக்கு நேர்ந்த துயரம்! செங்கல்பட்டு அருகே நடந்த சோகம்!!
mother and daughter death in lake
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள களத்தூர் பகுதியை சேர்ந்த ராஜேஸ்வரி அவரது மகள் மற்றும் உறவினரின் மகள் மூவரும் வீட்டின் அருகில் இருக்கும் ஏரியில் துணி துவைப்பதற்காக சென்றிருக்கிறார்.
ஆனால் வெகுநேரமாகியும் மூவரும் வீட்டிற்கு திரும்பாத காரணத்தால் உறவினர்கள் அவர்களை தேடி சென்றுள்ளனர். அப்போது ஏரிக்கரையில் அவர்கள் கொண்டு சென்ற துணிகள் அப்படியே இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
பின்னர் ஏரிக்குள் இறங்கி தேடிய போது ஒருவர் பின் ஒருவராக மூன்று பேரும் சடலமாக மீட்கப்பட்டனர். இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்ததின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் 3 பேரின் சடலங்களும் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், கடந்த ஒரு வருடத்திற்கு முன் ராஜேஸ்வரியின் கணவர் இதே போல் தான் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தாய், மகள் உட்பட 3 பேரும் ஏரியில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
English Summary
mother and daughter death in lake