போதைக்கு அடிமையான தாய்... குடிப்பதற்காக குழந்தைகளை பிச்சை எடுக்க வைத்த அவலம்..! மனதை உருக்கும் சம்பவம்..!  - Seithipunal
Seithipunal


தாய் என்பவள் தான் பிச்சை எடுத்தாவது, பெற்ற பிள்ளைகளை படிக்க வைக்க வேண்டும் என்று நினைப்பவள். ஆனால் இந்த இந்த சம்பவம் அப்படியே மாறாக இருக்கிறது. தாய் குடிக்க வேண்டும் என்பதற்காக பெற்ற பிள்ளைகளை பிச்சை எடுக்க வைத்திருக்கிறார். பிரசித்தி பெற்ற காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில் அருகே வசிக்கும் போதைக்கு அடிமையான தாய் ஒருவர் தனது இரண்டு குழந்தைகளையும் பிச்சை எடுக்க வைத்திருக்கிறார். 

பொதுவாக, எல்லா குழந்தைகளையும் போலவே நாமும் பள்ளிக்கு சென்று படிக்கச் வேண்டும், புத்தக பையை சுமக்க வேண்டும் என்று ஆசையாக இருக்கும் அந்த சிறு குழந்தைகளை வலுக்கட்டாயமாகப் பிச்சை எடுக்க வைத்து வருவதாக  அந்த பகுதி மக்கள் தெரிவித்திருக்கிறார்கள். தாயின் மதுப் பழக்கத்தைத்  தீர்த்து வைக்க, அந்த குழந்தைகளும் செய்வதறியாது கோயில் வாசலில் பிச்சை எடுத்து வருகிறார். 

இதை தொடர்ந்து, அந்த குழந்தைகளை மீட்டு அவர்களுக்கு அரசாங்கம் கல்வி உதவி செய்யவேண்டும் என்று அந்த பகுதி மக்கள் கோரிக்கை வைத்து வந்த நிலையில் இந்த செய்தி சார் ஆட்சியர் சரவணன் பார்வைக்கு வந்தது. இதை தொடர்ந்து அந்த  இரு சிறுவர்களையும் மீட்டு, அவர்களுக்கு தேவையான உதவிகளைச் செய்ய சார் ஆட்சியர் சரவணன் முன்வந்துள்ளார். எதிர்காலத்தில் அவர்கள் விரும்பவும் படிப்பை தந்து அவர்களை  நல்ல குடிகளாகக் கொண்டுவரவும் அரசு உதவவேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாக இருக்கிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

mother addicted to alcohol and beg her children


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->