மொபட்-மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதல்.! இளைஞர் பலி, 2 பேர் படுகாயம் - Seithipunal
Seithipunal


தென்காசி மாவட்டத்தில் மொபட்-மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் இளைஞர் உயிரிழந்து உள்ளார். மேலும் 2 பேர் பலத்த காயமடைந்துள்ளனர்.

தென்காசி மாவட்டம் ராயகிரி பள்ளிக்கூட தெரு பகுதியை சேர்ந்தவர் கவுதம்(23). இவர் அதே பகுதியை சேர்ந்த கரன்(19), ஹரிகரசுதன்(18) ஆகியோருடன் மொபட்டில் நேற்றிரவு சென்று கொண்டிருந்தார்.

அப்பொழுது ராயகிரி காளியம்மன் கோவில் அருகே அவர்கள் சென்றபோது அவ்வழியாக மனோகரன் (27) என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளுடன் நேருக்கு நேர் மோதியது. இதில் மொபட்டில் இருந்து தூக்கி வீசப்பட்ட மூன்று பேரும் பலத்த காயமடைந்தனர். இதில் கவுதம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

மேலும் படுகாயமடைந்த 2 பேரை அவ்வழியாக சென்றவர்கள் மீட்டு சிகிச்சைக்காக சிவகிரி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்பு அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக தென்காசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த சிவகிரி போலீசார், உயிரிழந்த கவுதம் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Moped motorcycle accident in thenkasi


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->