தென்காசி: லாரி மொபட் மீது மோதியதில் வாலிபர் பலி.! - Seithipunal
Seithipunal


தென்காசி மாவட்டத்தில் மொபட் மீது லாரி மோதிய விபத்தில் வாலிபர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோயில் அருகே உள்ள தென்மலை பகுதியை சேர்ந்த வேலு என்பவரது மகன் வைரமுத்து (33). இவர் நேற்று மொபட்டில் சங்கரன்கோவில்-ராஜபாளையம் சாலையில் சென்று கொண்டிருந்தார்.

அப்பொழுது பருவக்குடி விலக்கு அருகே சென்றபோது, எதிரே வந்த லாரி ஒன்று எதிர்பாராத விதமாக மொபட் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு தலையில் பலத்த காயமடைந்த வைரமுத்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த நல்லூர் போலீசார் உயிரிழந்த வைரமுத்துவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், லாரி ஓட்டுநரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Moped lorry collision in thenkasi


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->