மொபட் மீது லாரி மோதிய விபத்தில் ஆசிரியை உயிரிழப்பு.! - Seithipunal
Seithipunal


திருவள்ளூரில் மொபட் மீது லாரி மோதிய விபத்தில் ஆசிரியை உயிரிழந்துள்ளார். 

திருவள்ளூர் பூங்கா நகர் அப்பாசாமி சாலை பகுதியைச் சேர்ந்த தேவகுமார் என்பவரின் மனைவி சரண்யா(33). இவர் தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்தார்.

இந்நிலையில் சம்பவத்தன்று பள்ளியில் இருந்து வீட்டிற்கு மொபட்டில் சென்று கொண்டிருந்தபோது திருவள்ளூர் நகரின் மையப்பகுதியான உழவர் சந்தை அருகே, திருத்தணி நோக்கி வந்த லாரி ஒன்று மொபட் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இதில் படுகாயம் அடைந்த சரண்யாவை அப்பகுதியில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்பு மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்ட சரண்யா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இதையடுத்து இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Moped lorry accident in tiruvallur


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->