விருதுநகர் மோடி கிச்சன்! ஆதரவற்றவர்களுக்கு அரிசி, பருப்பு வழங்கல்!!
Modi kitchen in virudhunagar district
விருதுநகர் மாவட்டத்தில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் உருவாக்கப்பட்டுள்ள, மோடி கிச்சனில் தினமும் காலை, மதியம் என இருவேளையும் சுமார் 200 ஆதரவற்றோருக்கு உணவு வழங்கி வருகின்றனர்.
தற்போது இந்திய நாட்டில் பரவி வருகின்றன கரோனா தாக்கத்தின் காரணமாகஆதரவற்றவர்கள் முதியவர்கள் என்று வெளியே செல்ல முடியாத நிலையில் உணவுக்காக மிகவும் துன்பப் படக்கூடாது என்று மத்திய மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறது.
அந்த வகையில், அம்மா உணவகம் மற்றும் உள்ளாட்சி, நகராட்சி அமைப்புகளில் மூளை சிறப்பாக மேற்கொண்டு வருகிறது. மேலும் தொண்டு நிறுவனங்கள் அமைத்தல் உள்ளாட்சி உடன் இணைந்து பணியாற்றுவோம் அழைப்பு விடுத்தது.
இந்த நிலையில் விருதுநகர் மாவட்டத்தில் ஊரடங்கு பிறப்பித்த அன்றிலிருந்து மோடி கிச்சனை உருவாக்கிய அந்த நகரில் இருக்கும் 36 வார்டுகளில் இருக்கும் ஆதரவற்றோர் கண்டறிந்து அவர்கள் இருப்பிடத்திற்கே சென்று உணவுகள் வழங்கி வருகிறார்கள்.
மேலும் வறுமையில் இருக்கும் 180 குடும்பத்தினரை கண்டறிந்து அவர்களுக்கு பருப்பு சர்க்கரை அரிசி மற்றும் பலசரக்கு காய்கறிகள் அடங்கிய பையை வழங்கியுள்ளனர். வெளியில் செல்ல இயலாத அவர்களின் இருப்பிடங்களுக்கு சென்று பாஜகவினர் உணவு தயாரிக்கும் பொருட்களை வழங்கி வருகிறார்கள்.
English Summary
Modi kitchen in virudhunagar district