கட்சி நிர்வாகிகளுடன் கோவையில் கமல் ஹாசன் ஆலோசனை.. மய்யத்தின் முடிவு என்ன?..! - Seithipunal
Seithipunal


மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ஹாசன் கோவையில் நாளை கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தவுள்ளார். சென்ற சட்டசபை தேர்தலில் தனக்கு வாக்களித்த மக்களை சந்தித்து நன்றி கூறவுள்ளார்.

கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் கமல்ஹாசன் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்டு தோல்வியுற்றார். இந்நிலையில், கமல்ஹாசன் நாளை கோயம்புத்தூர் வர உள்ளார். 10 மேற்பட்ட கட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக அவர் கோவை வரவுள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது.

இன்று மாலை 6 மணி அளவில் விமானம் மூலம் கோவை வந்தடைவார் எனவும், இன்று இரவு பிரபல தனியார் ஹோட்டலில் ஓய்வெடுத்து கொண்டு நாளை கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்ப்பார் என்றும் அக்கட்சி தலைமை சார்பில் தகவல் தெரிவிக்கபட்டுள்ளது.

இதன் படி, நாளை காலை 9:15 மணியளவில் காட்டூர் மாரியப்ப கோனார் வீதியில் கட்சி அலுவலகத்தை திறந்து வைக்கிறார். அதனைத்தொடந்து வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து உரையாடுகிறார். கட்சி நிர்வாகிகளிடையே கலந்து ஆலோசிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

MNM President Kamal Hassan Visit Coimbatore 2 August 2021


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->