தேங்காய் பட்டினம் கிராமத்தில் அரங்கேறும் சோகம்.. அரசிடம் போராடி கதறும் மக்கள் நீதி மய்யம்..!!
MNM angry about thengapattanam fishermen issue
மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், " திட்டமிடாத துறைமுக கட்டுமானம் மற்றும் தடுப்பனைகளால் கடந்த மாதத்தில் மட்டும் நான்கு மீனவர்களை இழந்து தவித்த தூத்தூர், நீரோடி மற்றும் தேங்காய் பட்டினம் மீனவ கிராம மக்களின் தொடர் போராட்டத்திற்கு ஆதரவாக மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவர் டாக்டர்.கமல் ஹாசன் அவர்கள் குரல் கொடுத்தார்.
இதுவரை 19 மீனவர்களின் இறப்பிற்கு காரணமான தேங்காய்பட்டின துறைமுகம், உடனடியாக சீரமைக்கப்பட வேண்டும் என்றும், இறந்த மீனவர் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்கக் கோரியும் கடந்த மாதம், மாவட்ட ஆட்சியரிடம் மீனவர்கள் சார்பாக மக்கள் நீதி மய்யம் புகார் மனு அளித்தது. மீனவர் போராட்டத்தின் கோரிக்கையை ஏற்று மறுசீரமைப்புக்காக, மீன்வளத்துறை 1.6 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளதாக அறிவித்துள்ளது.
முதல் கட்டமாக விபத்துக்கு காரணமான "மணல் திட்டுகளை" அகற்றிட உபகரணங்கள் வரத் துவங்கியுள்ள செய்தி, மீனவர்களிடையே நம்பிக்கையை விதைத்துள்ளது. மணல்திட்டுகள் அகற்றுதல் மட்டுமே இந்த பிரச்சனைக்கு தீர்வாகாது என்பதை கடந்த மாத அறிக்கையிலேயே குறிப்பிட்டிருந்தோம். எனவே முக்கிய கோரிக்கைகளான 100 மீட்டர் துறைமுக நுழைவாயிலை குறைந்தபட்சம் 300 மீட்டர் வரை விரிவாக்கம் செய்வதுடன், இந்தியாவில் அதிக கடல் சீற்றம் கொண்ட பகுதிகளான நீரோடி முதல் கன்னியாகுமரி வரை, கடல் சீற்றத்தை கட்டுப்படுத்த, “தூண்டில் வளவு” திட்டத்தையும் விரைந்து நிறைவேற்ற வேண்டும் என்ற கோரிக்கையை மக்கள் நீதி மய்யம் முன்வைக்கிறது.
மேலும் இந்த போராட்டத்தில் ஆரம்பம் முதலே உறுதுணையாக இருந்த ஒவ்வொருவருக்கும், குறிப்பாக அந்த பகுதி மீனவ சகோதரர்கள், மீட்புப் பணியில் ஈடுபட்டு உயிர் காத்த மக்கள் நீதி மய்ய உறுப்பினர்கள் திரு. ராஜன் அவர்களின் குழுவினருக்கும் மக்கள் நீதி மய்யம் நன்றியை உரித்தாக்குகிறது. நகர்ப்புற மக்களுக்கு இணையான பாதுகாப்பு, ஒவ்வொரு மீனவருக்கும் கிடைக்கும் வரை மீனவர்களுடன் மக்கள் நீதி மய்யம் துணை நிற்கும்! நாளை நமதே " என்று கூறப்பட்டுள்ளது.
Tamil online news Today News in Tamil
English Summary
MNM angry about thengapattanam fishermen issue