நான் தான் அவர்களுக்கு வாக்களிக்க சொன்னேன்.. மமுக கண்ணன் திடீர் அதிரடி..!! - Seithipunal
Seithipunal


மக்கள் முன்னேற்ற கட்சியுடைய தலைவரான கண்ணன் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். இந்த பேட்டியின் போது அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தாவது., 

புதுச்சேரியில் உள்ள காமராஜ் நகர் தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் மக்கள் தங்களின் தீர்ப்பை வழங்கியுள்ளனர். இதனை ஏற்றுக்கொள்வது ஜனநாயக கடமை. நான் ஜனநாயகத்தை கட்டாயம் ஏற்றுக்கொள்கிறேன். இந்த தோல்வியை நாங்கள் ஏற்றுகொண்டாலும்., தற்போதைய தேர்தல் நடைமுறை சிக்கலாக உள்ளது என்று தேர்தல் ஆணையமே கூறியிருக்கிறது. 

வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை என்ன செய்தாலும் நிறுத்த இயலவில்லை என்று தேர்தல் தலைமை அதிகாரியே கூறியுள்ளார். தற்போதைய தேர்தல் குறித்து என்.ஆர்.காங்கிரசார் குற்றம்சுமத்தியுள்ள நிலையில்., தோல்விக்கு பின்னர் இதனை சொல்வது துயரமாக உள்ளது. 

தோல்விக்கு யார் மீதும் குறை கூற கூடாது... கடந்த கால தேர்தல்களில் தவறுகளை தட்டிகேட்டிருக்கும் பட்சத்தில்., தற்போதைய பிரச்சனைகள் ஏதும் இருக்காது. முதலமைச்சராக இரங்கசாமி பணியாற்றிய சமயத்தில் அனைத்தும் சரியாக நடைபெற்றதா என்ன?.. பிரதமர் மன்மோகன்சிங்கின் போக்கை விட மோசமாக இருக்கிறது. 

இந்த தேர்தலுக்கு நான் வெறும் கையோடு வருகை தந்தேன்., வெறும் கையுடன் செல்கிறேன். என்னை விட நோட்டா அதிகளவு வாக்குகள் பெற்றுள்ளது. தேர்தல் பிரசாரத்தில் நான் தான் வேட்பாளர் பிடிக்காவிட்டால் நோட்டாவிற்கு வாக்களிக்க கூறி கூறியிருந்தேன் என்று தெரிவித்தார். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

mmk kannan speech about lose victory election


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->