"எல்லோருமே என்கிட்ட ரொம்ப எதிர்பார்த்தீங்க; ஆனா எனக்குத்தான் பயமா இருக்கு" அதிர்ச்சியை தந்த ஸ்டாலினின் அறிக்கை! - Seithipunal
Seithipunal


மதுரை ரிசர்வ் லைன் பகுதியில் வசித்து வருபவர் சார்பு ஆய்வாளர் முருகசுந்தரம். இவரது 19 வயது மகளான ஜோதி துர்கா நீட் தேர்வுக்கு தயாராகிக் கொண்டிருந்தார்.

இந்த நிலையில் நாளை நடைபெற உள்ள நீட் தேர்வுக்கு படித்துக் கொண்டிருந்த மாணவி ஜோதி துர்கா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். தற்கொலைக்கு முன்பு மாணவி ஜோதி துர்கா பேசிய பெரிய ஆடியோ தற்போது வெளியாகியுள்ளது. அதில்,நீட் தேர்வு அசத்தல் தற்கொலை செய்து கொண்டதாகவும். அப்பா, அம்மா என்னை மன்னித்து விடுங்கள் என்றும் ஆடியோவில் மாணவி உருக்கமாக தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வில் ஜோதி துர்கா தோல்வி அடைந்த நிலையில், இந்தாண்டு நீட் தேர்வுக்கு தயாராகி வந்த மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், ஜோதி துர்காவின் உயிரிழப்புக்கு திமுக தலைவர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கையில், "நீட் தேர்வு அச்சம் காரணமாக மதுரை மாணவி ஜோதிஸ்ரீ துர்கா தற்கொலை செய்து கொண்ட செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. எல்லோருமே என்கிட்ட ரொம்ப எதிர்பார்த்தீங்க; ஆனா எனக்குத்தான் பயமா இருக்கு" என்று அவர் பேசிய ஆடியோ, நீட் தேர்வின் கோர முகத்தைக் காட்டுகிறது.

ஒரு தேர்வு, மாணவ சமுதாயத்தின் மனங்களை நிலைகுலைய வைப்பதாக இருப்பதை, அனிதா முதல் ஜோதி துர்கா மரணம் வரை உணர முடிகிறது. தற்கொலை என்பது தீர்வல்ல என்று மீண்டும் சொல்கிறேன் நீட் என்பது ஒரு தேர்வே அல்ல என்பதை, மீண்டும் மீண்டும் சொல்கிறேன்" என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

mkstalin condolence to madurai jothi durga


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->