" தூத்துக்குடி மாவட்ட மண் வீரம் விளைந்த மண் " - மு.க ஸ்டாலின் பேச்சு.!
MK Stalin Speech Thoothukudi District Meeting
தமிழகம் மீட்போம் என்ற நிகழ்ச்சியில் காணொளி வாயிலாக கலந்துகொண்ட திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தூத்துக்குடியில் நடைபெற்ற பல்வேறு விஷயங்கள் குறித்து பேசினார். இது குறித்து அவர் பேசுகையில், " நான் சமூகத்தின் பெயரை குறிப்பிடுகிறேன் என்று தவறாக நினைக்க வேண்டாம்.
காசி நாடார், அருணாச்சல நாடார் ஆகியோருக்கு எதிரான வழக்கில் இரண்டு வருட சிறை தண்டனை மற்றும் பிறருக்கு ஒருவருட சிறை தண்டனை விதிக்கப்பட்டது. உயர்நீதிமன்றம் வரை சென்று தண்டனைகளை குறைத்தோம்.
நமது கழக தொண்டர்களுக்கு இரத்தத்தினை உறைய வைக்கும் விஷயமாக கே.வி.கே சாமியின் படுகொலை சம்பவம் இருந்தது. தூத்துக்குடி ஆட்சியின் அலுவலக பெயர் கே.வி.கே சாமியின் பெயர் சூட்ட முன்னாள் முதல்வர் கலைஞரே காரணம். தூத்துக்குடி மாவட்ட மண் வீரம் விளைந்த மண் " என்று தெரிவித்தார்.
Tamil online news Today News in Tamil
English Summary
MK Stalin Speech Thoothukudi District Meeting