தமிழக அரசின் முடிவை எதிர்த்து, நீதிமன்றம் சென்றவர்கள்.. அமைச்சர் விஜயபாஸ்கர் பரபரப்பு பேச்சு.!
Minister Vijayabasker Speech about Nalini Chidambaram support NEET
மூன்று நாள் சட்டப்பேரவைக் கூட்டத்தில் இன்று காலை இரண்டாவது நாள் கூட்டம் தொடங்கியுள்ளது. இன்றைய சட்டப்பேரவை கூட்டத்தொடரில் நீட் தேர்வு உள்ளிட்ட முக்கிய விவரங்களை எதிர்க்கட்சிகள் எழுப்ப உள்ளன. இதற்கிடையே வெளியான தகவலின்படி, இன்றைய சட்டப்பேரவைக் கூட்டத்தில் ஆறு மசோதா தாக்கல் உள்ளதாகவும். அதில், முக்கியமான கொரோனா விவகாரம் குறித்து ஒரு மசோதா தாக்கல் பட உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
தமிழகத்தில் அடுத்தடுத்து பல தற்கொலைகள் என நீட் தேர்வு தற்கொலைகள் அரங்கேறி வரும் நிலையில், இந்த விஷயத்திற்கு எதிர்க்கட்சியாக இருந்து வரும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் இப்போதைய ஆளும் கட்சிகளை குற்றம் சுமதி வருகிறது. ஆனால், ஒருகாலத்தில் ஆளும் கட்சியாக இருந்த திமுகவும், காங்கிரசும் இதனை அறிமுகப்படுத்தியது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், தமிழகத்தில் நீட் தேர்வுக்கு எதிராக அரசியல் செய்வது பெரும் மன வேதனை அளிக்கிறது. எட்டு மாதங்களில் நீட் தேர்வை ரத்து செய்தோம் என்று கூறுகிறீர்கள்.. எப்படி நீங்கள் நீட் தேர்வை ரத்து செய்வீர்கள்?என்ற கேள்வியை முன்வைத்த அமைச்சர் விஜயபாஸ்கர், தமிழகத்திற்கு நீட் விலக்கு கோரிய சமயத்தில் நீதிமன்றத்திற்குச் சென்று வாதாடி வெற்றி பெற்றவர் நளினி சிதம்பரம் என்று பேசியுள்ளார்.
Tamil online news Today News in Tamil
English Summary
Minister Vijayabasker Speech about Nalini Chidambaram support NEET