மேலும் 10 இலட்சம் பி.சி.ஆர் கிட்கள்... சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவிப்பு.!! - Seithipunal
Seithipunal


தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கமானது கடுமையான அளவு அதிகரித்து வருகிறது. இதனால் தினமும் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், தமிழகம் முழுவதும் இரண்டாவது முறையாக உச்சகட்ட பாதிப்பு வெகுவாக அதிகரித்துள்ளது. 

இந்நிலையில், புதிதாக 10 இலட்சம் பி.சி.ஆர் கிட்கள் வாங்க தமிழக முதல்வர் ஆணை பிறப்பித்து இருப்பதாக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. மேலும், ஏற்கனவே பி.சி.ஆர் கிட்கள் தேவையான அளவில் கையிருப்பு உள்ள நிலையில், கூடுதல் கொள்முதல் செய்ய ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். 

மேலும், தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து வரும் சூழலில், தமிழகம் முழுவதும் கூடுதல் படுக்கை வசதிகளை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல் தெரிவித்துள்ளார். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Minister Vijayabasker says PCR Kids order


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->