இரண்டு வாரத்தில் உச்சகட்டத்தை வெளிப்படுத்தும் கொரோனா - அமைச்சர் விஜயபாஸ்கர்.!
Minister Vijayabasker Says Corona Second wave Outbreak April End 2 Weeks 16 April 2021
கொரோனா இரண்டாவது பரவல் அலை தமிழகத்தில் வேகமாக பரவி வரும் நிலையில், உயிரிழப்பு மற்றும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. கொரோனா நோய்த்தொற்றை தடுக்க தமிழக சுகாதாரத்துறை போர்க்கால அடிப்படையில் களமிறங்கி இருக்கிறது.
மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. பல்வேறு கட்டுப்பாடுகளும் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முகக்கவசம் அணிந்து வெளியே வருவது, சமூக இடைவெளியை கடைபிடிப்பது போன்றவை மீண்டும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களை சந்தித்தார். இந்த செய்தியாளர்கள் சந்திப்பில், " தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது. தேர்தல் நடத்தை விதிகள் தமிழகத்தில் அமலில் இருக்கிறது.
தேர்தல் ஆணையம் கொரோனா தொடர்பாக அமைச்சர் கூட்டம் நடத்தலாம் என தெரிவிக்கும் நிலையில், களத்தில் உள்ள பல நன்னடத்தை விதிகள் முட்டுக்கட்டையாக இருக்கிறது. தேர்தலின் விதிகளால் கைகள் கட்டப்பட்டு இருக்கிறது.
மக்கள் பதற்றமாக உள்ள சூழ்நிலையில் அவர்களுக்கு ஆறுதலாக, ஆதரவாக இருக்க வேண்டும். ஆனால், தேர்தல் விதிகளால் அவை செய்ய முடியாது. இரண்டு வாரத்தில் கொரோனா தொற்றின் வேகம் அதிகரிக்கும் என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர் " என்று தெரிவித்தார்.
Tamil online news Today News in Tamil
பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.
English Summary
Minister Vijayabasker Says Corona Second wave Outbreak April End 2 Weeks 16 April 2021