விபத்தில் சிக்கியவரை காப்பாற்றிய அமைச்சர் வீரமணி..!
minister veermani saves person from accident
தமிழகத்தின், வேலூர் மாவட்டம் நெமிலி அருகே முதலமைச்சர் சிறப்பு குறைதீர் கூட்டம் நடந்தது. அப்போது, அதில் கலந்து கொண்ட வருமான வரித்துறை அமைச்சர் மற்றும் பத்திரப் பதிவுத் துறை அமைச்சர் வீரமணி வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தார்.
இதை தொடர்ந்து, அவர் சென்று கொண்டிருந்த வழியில், காரியக்குடல் பகுதியைச் சேர்ந்த கோட்டி என்பவர் சாலை விபத்தில் சிக்கி உயிருக்குப் போரடிக் கொண்டிருந்தார். அந்த பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் ஆம்புலன்ஸை அழைக்க முயற்சி செய்தார்கள், அனால் அழைக்க இயலாத காரணத்தால் செய்வதறியாது இருந்தார்கள்.
இதைத் தொடர்ந்து, அடிபட்டவரைக் கண்ட அமைச்சர் வீரமணி உடனடியாக காரை நிறுத்தி, கீழே இறங்கியுள்ளார். அதன் பின், அடிபட்டவரின் அருகே சென்று விசாரித்துள்ளார்.
மேலும், ஆம்புலன்ஸ் வெகு நேரமாக வராததை அறிந்த அமைச்சர் வீரமணி, அவருடன் சென்ற அதிமுக உறுப்பினர்கள் வாகனத்தில் அடிபட்ட நபரை ஏற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.
இதை தொடர்ந்து, அடிபட்ட அந்த நபர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
English Summary
minister veermani saves person from accident