சிறுவனின் பெற்றோர்களை நேரில் அழைத்து பேசி சர்ச்சைக்கு முடிவு கட்டிய அமைச்சர்.!
minister srinivasan meet with student parents
முதுமலை யானைகள் நலவாழ்வு முகாமிற்கு சென்ற தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் ஒரு மாணவரை அழைத்து தன்னுடைய காலணிகளை அகற்ற சொன்னது நேற்று காலை முதல் மிகப்பெரிய சர்ச்சைக்கு உள்ளாகியுள்ளது . இந்த நிலையில் அந்த மாணவன் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
நீலகிரி மாவட்டம் முதுமலையில் நடைபெற்று வரும் யானைகள் நலவாழ்வு முகாமில் தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் அவர்கள் இன்று பார்வையிட்டார். அப்போது அங்கு அதிகாரிகள் மற்றும் கட்சி நிர்வாகிகளுடன் சென்ற அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் அங்கே நின்று கொண்டிருந்த மாணவரை அழைத்து தனது காலனிகளை அகற்ற சொன்னார். அந்த மாணவனும் கழட்டிவிட்டார்.
இதனை உடனடியாக பத்திரிகையாளர்கள் படம் பிடிக்க, வேகமாக வைரலாக, பேரனாக நினைத்து தான் அழைத்தனே தவிர வேறு நோக்கம் இல்லை என அமைச்சர் தெரிவித்திருந்தார். இதற்கிடையே அமைச்சரின் காலணிகளை கழற்றி விட்ட மாணவன் கேத்தன் நீலகிரி மசினகுடி காவல் நிலையத்தில் அமைச்சர் சீனிவாசன் மீது புகார் அளித்து இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், ஊட்டியில் உள்ள அரசு விருந்தினர் மாளிகைக்கு சிறுவன் மற்றும் அவரது குடும்பத்தினரை வரவழைத்து அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசினார். அப்போது, மாணவனின் பெற்றோரிடம் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் வருத்தம் தெரிவித்தார்.
உதகையில் மாணவனின் பெற்றோரை சந்தித்து பேசியபோது அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் வருத்தம் தெரிவித்ததையடுத்து அமைச்சர் மீது காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரை திரும்ப பெறுவதாக மாணவனின் பெற்றோர் அறிவிப்பு.
English Summary
minister srinivasan meet with student parents