திமுகவின் வாக்குறுதியை நிறைவேற்ற அமெரிக்காவின் கஜானா போதாது - அமைச்சர் எஸ்.பி. வேலுமணி விமர்சனம்.! - Seithipunal
Seithipunal


திமுக அளிக்கும் பொய்யான வாக்குறுதியை நிறைவேற்ற, அமெரிக்காவிலுள்ள கஜானா கூட பத்தாது என அமைச்சர் எஸ்.பி வேலுமணி தெரிவித்துள்ளார். 

திருப்பூர் மாவட்டத்திலுள்ள காங்கேயம் சாலையில் இருக்கும் அதிமுக அலுவலகத்தை திறந்து வைத்த அமைச்சர் எஸ்.பி வேலுமணி, பின்னர் தொண்டர்களிடையே உரையாற்றினார். இதன் பின்னர், நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில், திமுக நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை அளித்து வருகிறது. 

இந்த பொய்யான வாக்குறுதிகளை மக்கள் நம்பி ஏமாறக்கூடாது. வரும் சட்டமன்ற தேர்தலில், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மீண்டும் வெற்றி பெறச் செய்ய வேண்டும். அதிமுகவினர் அண்ணன் தம்பி போல களப்பணியாற்ற வேண்டும். 

திமுகவின் பொய்யான வாக்குறுதிகளை நிறைவேற்ற, அமெரிக்காவில் உள்ள கஜானாவில் இருக்கும் பணம் கூட பத்தாது. அந்த அளவிற்கு பொய்யான வாக்குறுதிகள் திமுகவால் கொடுக்கப்பட்டு வருகிறது " என்று தெரிவித்தார்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Minister SP Velumani Speech at Tiruppur Kangeyam 20 Jan 2021


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->