தனியார் பள்ளிகளின் அடாவடி.. அமைச்சர் செங்கோட்டையன் பெற்றோர்களுக்கு வேண்டுகோள்.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இணையத்தளம் மூலமாக பாடங்கள் பயிற்றுவிக்கப்பட்டு வருகிறது. தனியார் பள்ளிகளுக்கென வசூலிக்கப்படவேண்டிய கட்டணம் குறித்த தகவல்கள் ஏற்கனவே அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது. 

பெரும்பான்மை தனியார் கல்லூரிகள் அரசின் உத்தரவை மீறி செயல்படுவதாகவும், பெற்றோர்கள் கல்வி கட்டணத்தை உடனே செலுத்தவும், அதிகளவு கட்டணம் வாங்குவதாகவும் புகார் அடுத்தடுத்து எழுந்து பெற்றோர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், ஈரோட்டில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்தார். இந்த செய்தியாளர்கள் சந்திப்பில், " தனியார் பள்ளிகள் அதிக கட்டணம் தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது ". 

இதற்கு பதிலளித்த அமைச்சர் செங்கோட்டையன், " தனியார் பள்ளிகளில் அதிக கட்டணம் தொடர்பாக புகார்கள் பெற்றோர்கள் தரப்பில் எழுந்து வருகிறது. பெற்றோர்கள் தரப்பில் எழுத்துபூர்வமான புகார் அளித்தால், தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் " என்று தெரிவித்தார்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Minister Sengottaiyan speech about Private School Fees Structure 29 Aug 2020


கருத்துக் கணிப்பு

தமிழக மக்களவை தேர்தல் ரேஸில் முந்துவது எந்த கூட்டணி?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழக மக்களவை தேர்தல் ரேஸில் முந்துவது எந்த கூட்டணி?




Seithipunal
--> -->