தேர்வு முடிவுகள் எப்போது?.. அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி.!! - Seithipunal
Seithipunal


ஈரோடு மாவட்டத்தில் உள்ள நம்பியூரில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்தார். இந்த செய்தியாளர்கள் சந்திப்பில்,  

பன்னிரண்டாம் வகுப்பு தேர்வுகள் எழுதாத மாணவர்கள் குறித்த விபரம் சேகரிக்கப்பட்டு வருகிறது. பட்டியல் தயாரிக்கப்பட்டு பின்னர் மாணவர்களுக்கான தேர்வுகள் தேதி அறிவித்தவுடன் நடைபெறும்.  

மதிப்பெண் பட்டியல் தயார் செய்யப்படும் பணியானது நடைபெற்று வருகிறது. பாடத்திட்டம் குறைக்கும் பணி நடைபெற்று வருகிறது, சூழ்நிலை கருதி பருவ தேர்வுகளை இரத்து செய்வது தொடர்பாக முதல்வர் முடிவெடுப்பார்.

தனியார் பள்ளிகளின் கட்டண நிர்ணயம் செய்வது தொடர்பாகவும் முடிவெடுக்கப்படும். கொரோனா காரணமாக புத்தகம் அச்சடிக்கும் தாமதமாகியுள்ளது. இம்மாத இறுதிக்குள் புத்தகங்கள் தயாராகிவிடும். 

புத்தகங்கள் தயார் ஆனதும் மாணவர்களுக்கு வழங்குவது குறித்து பின்னர் முடிவுகள் எடுக்கப்படும். 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் ஜூலை முதல் வாரத்தில் வெளியாகும் என்று தெரிவித்தார்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Minister Sengottaiyan Press Meet latest 18 June 2020


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->