பள்ளிகள் திறப்பு எப்போது?.. அமைச்சர் செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி.!!
Minister Sengottaiyan Press Meet 27 June 2020
பள்ளிகள் திறப்பதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள குமாரபாளையம் பகுதியில் நடைபெற்ற நிவாரண பொருட்கள் வழங்கும் விழாவில் அமைச்சர் செங்கோட்டையன், தங்கமணி உட்பட பல அமைச்சர்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சில் கலந்து கொண்ட அமைச்சர்கள், நிகழ்வின் முடிவிற்கு பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது.
இந்த செய்தியாளர்கள் சந்திப்பில், தமிழகத்தில் செயல்பட்டு வரும் பள்ளிகள் திறப்பது என்பது தற்போதையை சூழ்நிலையில் சாத்தியமற்றது என்றும், கொரோனா பரவல் சூழ்நிலை மாறிய பிபின்னர் பள்ளிகளை திறப்பது தொடர்பான முடிவுகள் எடுக்கப்படும்.
கொரோனா பரவல் சரியானவுடன், பெற்றோர்களுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்ட பின்னர், தமிழக முதல்வரின் கவனத்திற்கு எடுத்து சென்று பள்ளிகள் திறப்பு தொடர்பாக அறிவிக்கப்படும் என்று தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார்.
Tamil online news Today News in Tamil
English Summary
Minister Sengottaiyan Press Meet 27 June 2020