கிருஷ்ணகிரி பள்ளியில் தேர்வு ஏதும் நடைபெறவில்லை.. அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தின் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மாத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பயின்று வரும் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு நேற்று நடந்ததாகவும், முன்னதாக மாணவிகள் தேர்வு எழுதிய விடைத்தாள்கள் காணவில்லை என்றும் தகவல் வெளியானது. இந்த விஷயம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில், ஈரோடு மாவட்டத்தில் உள்ள கோபி செட்டிபாளையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மாத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவிகள் தேர்வு எழுதவில்லை என்றும், ரேங்க் கார்டில் கையெழுத்து போடுவதற்காக மாணவிகள் பள்ளிக்கு வந்துள்ளனர் என்றும் விளக்கம் அளித்துள்ளார். 

அரசு ஆசிரியர்கள் தங்கள் குறைகளை துறைவாரியாக தான் கூற வேண்டும் என்றும், நேரடியாக பேட்டி அளிக்க கூடாது என்றும் கூறியுள்ளார். மேலும், காலாண்டு, அரையாண்டு தேர்வு நடத்தாத பள்ளிகளை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர் என்றும் பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளரிடம் தெரிவித்தார்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Minister Sengottaiyan Latest press meet Erode Gopi 20 June 2020


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->