உயிருடன் உள்ள அமைச்சருக்கு இரங்கல் தெரிவித்து அதிரவைத்த செல்லூர் ராஜு.. அதிர்ந்துபோன அதிகாரிகள்.! - Seithipunal
Seithipunal


மறைந்த பின்னணி பாடகர் எஸ்.பி பாலசுப்ரமணியத்திற்கு பதிலாக, உயிருடன் உள்ள அதிமுக அமைச்சர் எஸ்.ஆர் பாலசுப்பிரமணியத்துக்கு அமைச்சர் செல்லூர் ராஜு இரங்கல் தெரிவித்துள்ளது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. 

திண்டுக்கல் மாவட்டத்தில் அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களை சந்தித்தார். இந்த செய்தியாளர்கள் சந்திப்பில், செய்தியாளர்கள் சார்பில் எஸ்.பி.பி குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த அமைச்சர் செல்லூர் ராஜு, " அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் எஸ்.ஆர். பாலசுப்ரமணியம் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அன்பையும், ஆதரவையும் அதிகளவு பெற்ற அமைச்சர் அவர். அதுமட்டுமல்லாது ஜெயலலிதா மீது பொய்யான வழக்கு பதிவு செய்யப்படுகையில் குரல் கொடுத்தவர் என்றும் கூறியுள்ளார். 

இதனால் பத்திரிக்கையாளர்கள் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகிய நிலையில், அருகிலிருந்த அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் உயிரிழந்தது பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் எப்படி என்று தெளிவுபடுத்தியுள்ளார். இதனையடுத்து சுதாரித்துக்கொண்ட அமைச்சர் செல்லூர் ராஜு எஸ்.பி.பிக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், இவர் விளம்பரத்திற்கான இவ்வாறு பேசியிருக்கலாம் என்றும் நெட்டிசன்கள் கருதுகின்றனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Minister Sellur K Raju Wrongly Regret Minister SRB


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->