தமிழக முதல்வருக்கு கொரோனா வராது.. வந்தால்..... அமைச்சர் செல்லூர் ராஜு..!!
Minister Sellur K Raju Latest press meet 20 June 2020
தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கமானது கடுமையான அளவு அதிகரித்துள்ளது. கொரோனாவிற்கான பல தடுப்பு நடவடிக்கைகள் அதிரடியாக எடுக்கப்பட்டு வரும் சூழ்நிலையிலும், கொரோனா கட்டுக்குள் இல்லாமல் தனது வீரியத்தை காண்பித்து வருகிறது.
தமிழக மக்களை காக்கும் பொருட்டு அரசு பல முயற்சிகளை மேற்கொண்டு வரும் நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மக்கள் பாதுகாப்புடன் இருக்க வேண்டும் என்றும், சமூக இடைவெளியை கடைபிடித்தல், முகக்கவசம் அணிதல் மற்றும் கை, கால்களை சுத்தம் செய்த போன்ற அறிவுரையை மீண்டும் வழங்கினார்.
மேலும், மக்களுக்கு தேவையான நடவடிக்கை தொடர்ந்து எடுக்கப்படுவதாகவும், மக்கள் ஊரடங்கை கடைபிடித்து பாதுகாப்புடன் இருக்க வேண்டும் என்றும், இந்த நோய் எப்போது சரியாகும் என்பது கடவுளுக்கு தான் தெரியும் என்று கூறினார். இந்நிலையில், மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் தமிழக முதல்வருக்கு கொரோனா ஏற்பட்டாலும் சரியாகிவிடும் என்று தெரிவித்துள்ளார்.
இது குறித்து அமைச்சர் செல்லூர் ராஜு செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு கொரோனா வைரஸ் தாக்கம் ஏற்படாது என்றும், ஒருவேளை கொரோனா தாக்கும் சூழல் ஏற்பட்டாலும் அதுவே முதல்வரை விட்டு விலகி சென்றுவிடும் என்றும் கூறியுள்ளார்.
Tamil online news Today News in Tamil
English Summary
Minister Sellur K Raju Latest press meet 20 June 2020