ஆஸ்பத்திரியில் இருந்து திரும்பியதும் சமூக இடைவெளி சுவாகா... வைரலாகும் அமைச்சர் செல்லூர் ராஜு வீடியோ.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கமானது கடுமையான அளவு அதிகரித்து இருந்தது. இதனால் பலரும் பாதிக்கப்பட்டு வந்தனர். மேலும், களப்பணியில் இருந்த பலருக்கும் கொரோனா உறுதியாகி, மருத்துவமனையில் அனுமதியாகி சிகிச்சை பெற்று வந்தனர். 

தமிழகத்தில் கொரோனா மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,39,978 ஆக உயர்ந்துள்ளது. பூரண நலன் பெற்றவர்களின் எண்ணிக்கை 1,78,178 ஆக உயர்ந்துள்ளது. மொத்த பலி எண்ணிக்கை 3,838 ஆக உயர்ந்துள்ளது. 

அமைச்சர் செல்லூர் ராஜு மற்றும் அவரது மனைவி கொரோனா பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதியாகி சிகிச்சை பெற்று வந்தனர். இந்த நிலையில், சிகிச்சையை முடித்து பூரண நலன்பெற்று இல்லத்திற்கு திரும்பிய அமைச்சர் செல்லூர் ராஜுவுக்கு அ.தி.மு.க சார்பில் பலத்த வரவேற்ப்பு வழங்கப்பட்டது. 

பட்டாசுகள் கொளுத்தி, ஆரவாரமாக செல்லூர் ராஜூவை அக்கட்சியினர் வரவேற்ற நிலையில், சமூக இடைவெளிகள் அனைத்தும் காற்றில் பறக்க விடப்பட்டு வரவேற்பு நிகழ்ச்சிகள் பலத்த மரியாதையுடன் நடைபெற்றுள்ளது. மேலும், ஆறுதல் விஷயமாக பெரும்பாலானோர் முகக்கவசம் அணிந்துள்ளனர். இந்த விஷயம் குறித்து வீடியோ காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகிறது. 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Minister Sellur K Raju flouted social distance when return home


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->