என்னது மீண்டும் அதிமுகவில் சசிகலாவா.?! அமைச்சரின் பரபரப்பு பேட்டி.!
Minister says about ammk sasikala
மறைந்த முதல்வரான அதிமுக ஜெயலலிதாவுக்கு மிக மிக நெருக்கமான தோழியாக இருந்தவர் சசிகலா. சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவின் மறைவிற்குப் பின்னர், அவர் சிறை சென்றார். தற்போது பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அவர் தண்டனை பெற்று வருகின்றார்.
சசிகலா சிறையில் இருந்தாலும், அவர் குறித்த பேச்சுக்களுக்கு ஓய்வு கிடைப்பது இல்லை. அரசியல்வாதிகளின் விமர்சனங்களும் அவ்வப்போது சசிகலா குறித்து இருந்துதான் வருகிறது. சமீபத்தில் டுவிட்டரில் கூட சசிகலா இந்திய அளவில் ட்ரண்ட் ஆனார்.
இந்த நிலையில் தமிழக வணிக வரித் துறை அமைச்சரான கே சி வீரமணி செய்தியாளர்களை இன்று சந்தித்தார். அப்போது, பத்திரிகையாளர் ஒருவர் சசிகலா மீண்டும் சிறையிலிருந்து வெளிவருவதாக செய்திகள் வெளியாகி வருகின்றது. அத்தோடு சசிகலா வெளியில் வந்ததும் அதிமுகவிற்கு தலைமை ஏற்பார் என்றும் கூறப்படுகிறது, இதுகுறித்து உங்களுடைய பதில் என்ன? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
அதற்கு அமைச்சர், " என்னது மீண்டும் அதிமுகவில் சசிகலாவா? சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினரை எதிர்த்து தான் அதிமுக ஆட்சியும், கட்சியும் நடைபெற்று வருகிறது. மீண்டும் சசிகலா அதிமுகவிற்கு திரும்ப வாய்ப்பே இல்லை. சசிகலா அதிமுக எதிரி." என்று பதிலளித்துள்ளார்.
English Summary
Minister says about ammk sasikala