மாடுபிடி வீரர்களுக்கு அரசு வேலை.. தமிழக அமைச்சர் அறிவிப்பு..!!
minister rp udhayakumar says jallikattu
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை பார்வையிட்ட பிறகு அமைச்சர் ஆர் பி உதயகுமார் செய்தியாளருக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியவை, ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் வீரர்களுக்கு தகுதி அடிப்படையில் அரசு வேலைகளுக்கு விண்ணப்பிக்கும் பட்சத்தில் வேலைவாய்ப்பு அளித்திட முதலமைச்சரின் பார்வைக்கு எடுத்துச்செல்லப்படும்.
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு ஏற்பாடுகளை அனைத்து துறைகளும் சிறப்பாக செய்துள்ளனர். அதிமுக அம்மா பேரவை சார்பில் கடந்த இரண்டு ஆண்டுகளாக சிறந்த காளைகளுக்கும், சிறந்த மாடுபிடி வீரர்களுக்கும் கார்கள் முதலமைச்சர், துணை முதலமைச்சர் பெயரில் வழங்கப்படுகிறது.
இந்த ஆண்டு சிறந்த மாடுபிடி வீரருக்கு ஒரு கார், சிறந்த காலை உரிமையாளருக்கு ஒரு காரும் முதலமைச்சர், துணை முதலமைச்சர் சார்பில் வாங்கப்படுகிறது. இந்த ஆண்டு சிறந்த காளைகளின் உரிமையாளர்கள் மற்றும் சிறந்த மாடுபிடி வீரரை சென்னைக்கு அழைத்து சென்ற முதலமைச்சர் கையால் பரிசு வழங்கப்படும். ஜல்லிக்கட்டு போல் தமிழர்களுடைய மற்ற வீர விளையாட்டுகளை கலை மற்றும் கலாச்சாரத்தை அதிமுக அரசு பாதுகாக்கும் என அமைச்சர் உதயகுமார் தெரிவித்தார்.
English Summary
minister rp udhayakumar says jallikattu