நான் எதற்காக ஜி.எஸ்.டி கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை - அமைச்சர் விளக்கம்.! - Seithipunal
Seithipunal


இன்றைய ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில் ஏன் கலந்துகொள்ளவில்லை என தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் விளக்கம் அளித்தார். 

மதுரை மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகள் குறித்து மாநகராட்சி வளாகத்தில் ஆய்வு கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் தமிழக நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கலந்துகொண்டார். இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்தார். 

இந்த செய்தியாளர்கள் சந்திப்பில், " மதுரையில் சரியான திட்ட வரைமுறைகள் இல்லாமல் பல்வேறு திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. ஜி.எஸ்.டி கூட்டத்தில் கலந்துகொள்ள தாமதமாக அழைப்பு வந்தது. முதலில் வழங்கப்பட்ட நிகழ்ச்சி நிரலில் பல முக்கிய நிகழ்வுகள் இல்லை. இதனால் நான் கூட்டத்தில் கலந்துகொள்ள வில்லை " என்று தெரிவித்தார். 

இன்று உத்திர பிரதேசம் மாநிலத்தில் உள்ள லக்னோவில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. கொரோனாவுக்கு பின்னர் சுமார் 20 மாதங்களுக்கு பின்னர் மாநில நிதியமைச்சர் கூட்டம் நேரடியாக நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Minister PTR Palanivel Thiyagaran Pressmeet about why Could Not Attend GST Meeting 17 Sep 2021


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->