அமைச்சர் மா.சுப்பிரமணியன் டெல்லி பயணம்.. 10க்கும் மேற்பட்ட கோரிக்கைகள்.! செவி சாய்க்குமா மத்திய அரசு.?
minister ma subramanian going to delhi
தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் டெல்லி புறப்பட்டனர்.
சென்னை விமானநிலையத்தில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது, இன்று பிற்பகல் 2 மணி அளவில் ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சரை சந்திக்க உள்ளோம். 11 புதிய மருத்துவ கல்லூரிக்கு மாணவர் சேர்க்கை இந்த ஆண்டு தொடங்கப்பட வேண்டும்.
தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகளை உடனடியாக தொடங்க வேண்டும். நீட் தேர்வு சம்பந்தமாக விலக்கு அளிக்கப்பட வேண்டும் என வலியுறுத்த உள்ளோம். 10க்கும் மேற்பட்ட கோரிக்கைகளை மத்திய சுகாதாரத்துறை அமைச்சரிடம் கொடுக்க இருக்கிறோம் என தெரிவித்துள்ளார்.
English Summary
minister ma subramanian going to delhi