அவுங்க மட்டும் கேஸ் போடாம இருந்தாங்கன்னா.. அதிமுக அமைச்சர் பரபரப்பு பேச்சு.!! - Seithipunal
Seithipunal


அமைச்சர் கடம்பூர் ராஜு செய்தியாளர்களை சந்தித்தார். இந்த செய்தியாளர்கள் சந்திப்பில், " நீட் தேர்வு குறித்து மத்திய அரசிற்கு அழுத்தம் கொடுத்து வரும் ஒரே அரசு தமிழக அரசு மட்டும் தான். நீட் தேர்வு இரத்து செய்யப்படுவதில்லை அதிமுக உறுதியாக இருக்கிறது. 

தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று மத்திய அரசு அரசாணை வெளியிடும் சூழலில், நளினி சிதம்பரம் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து தடையை பெற்றார். அவர் வழக்கு தொடுக்காமல் இருந்தால், ஒரு வருடத்திற்கு முன்னதாகவே நீட்டில் விதிவிலக்கு கிடைத்திருக்கும்.

திமுக மற்றும் காங்கிரஸ் இன்று அரசியலுக்கு பேசி வருகின்றனர். நீட் வேண்டாம் என்பதே எங்களின் கொள்கையாகும். மனஅழுத்ததால் மாணவர்கள் விபரீத முடிவு எடுக்க கூடாது. நீட் தேர்வுக்கு தேவையான பல பயிற்சிகளையும் தமிழக அரசு அளித்து வருகிறது. கட்டணமே இல்லாமல் நீட் தேர்வுக்கு மாணவர்களை தயார்படுத்தியும் வருகிறோம்.

சட்டப்பேரவை தேர்தலிலும் அதிமுக தான் வெற்றி பெரும். இந்த விஷயத்தில் எவ்விதமான மாற்றமும் இல்லை. ரஜினி மட்டுமல்லாது, பிற நடிகர்கள் யாரும் புதிய கட்சியை துவங்கினால், அதிமுகவிற்கு எந்த பாதிப்பும் இல்லை. அதிமுகவின் வாக்குகளை என்றும் சிதறடிக்க இயலாது. பல காலகட்டத்தில் இது நிறைவேறியுள்ளதும் குறிப்பிடத்தக்கது " என்று கூறினார்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Minister Kadampur Raju Press meet 13 Sep 2020


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->