18 பேர் கொண்ட குழு.. அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி.!!
Minister KA Sengottaiyan Latest Press Meet 24 June 2020
ஈரோடு மாவட்டத்தில் உள்ள கோபிசெட்டிபாளையத்தில் தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்தார். இந்த செய்தியாளர்கள் சந்திப்பில், பள்ளி மாணவர்களுக்கு புத்தகம் வழங்குவது தொடர்பாக தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் பேசுகையில், பள்ளி மாணவர்களுக்கு இம்மாத இறுதிக்குள் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல், 12 ஆம் வகுப்பு வரை பயின்று வரும் மாணவர்களுக்கு பாடப் புத்தகம் வழங்கும் என்றும் வழங்கப்படும் என்று தெரிவித்தார்.
மேலும், பள்ளி செயல்படும் நாட்கள் குறைவாக இருக்கும் காரணத்தால், முக்கிய பாடங்களை மட்டும் படிக்க சில பக்கங்களை குறைக்க 18 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
Tamil online news Today News in Tamil
English Summary
Minister KA Sengottaiyan Latest Press Meet 24 June 2020