தமிழகத்தில் ராக்கெட் ஏவு தளம், மக்களவையில் மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் பதில்!
minister jitendra singh says about isro in thoothukudi
தமிழகத்தில் ராக்கெட் ஏவு தளத்திற்கான நிலம் ஆறு மாதங்களில் கையகப்படுத்தப்படும் என மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.
இது குறித்து மக்களவையில் கேட்கப்பட்ட கேள்விக்கு மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் பதிலளித்து பேசியதாவது, " தூத்துக்குடியில் ராக்கெட் ஏவுதளம் அமைக்க தமிழக அரசு 961 நிலத்தை அடையாளம் கண்டறிந்துள்ளது. இன்னும் ஆறு மாதத்திற்குள் அந்த நிலத்தை தமிழக அரசு மத்திய அரசிடம் ஒப்படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழக அரசு கண்டறிந்துள்ள 961 எக்டர் நிலத்தில், 431 எக்டர் நிலத்தின் அளவிடும் பணி முடிவடைந்துவிட்டது. மீதி நிலத்துக்கு அளவிடும் பணி நடைபெற்று வருகிறது என ஜிதேந்திர சிங் கூறினார்.
English Summary
minister jitendra singh says about isro in thoothukudi