கொரோனா என்பது கொரியரை போல அனைவருக்கும் கொண்டு சேர்க்க கூடாது... அமைச்சர் ஜெயக்குமார் டாக்ஸ்..!!
minister jeyakumar speech about corona virus latest
கரோனா வைரஸின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் இந்தியா முழுவதும் நாடுதழுவிய ஊரடங்கு அமலாகியுள்ளது. தமிழகத்தில் கரோனா வைரஸின் பாதிப்பு மிகவும் அதிகமாக உள்ளது.
மேலும், இந்தியாவிலேயே அதிகளவு பாதிப்பை கொண்ட இரண்டாவது மாநிலமாக தமிழகம் இருக்கிறது.. இதனால் அரசு தேவையான நடவடிக்கைகள் அனைத்தையும் போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு வருகிறது. தமிழகத்தில் நேற்று வரை 834 பேர் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 8 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், கொரோனா என்பது கொரியாரை போல... இது அனைவரிடமும் சென்று சேரக்கூடாது.. அம்மா உணவகத்தில் மக்கள் அனைவரும் சமூக விலகலை கடைபிடித்து இருந்து வந்தால், அனைவரும் மூன்று வேலை உணவையும் சாப்பிட்டுக்கொள்ளலாம். பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் தேவையான நடவடிக்கை தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
Tamil online news Today News in Tamil
English Summary
minister jeyakumar speech about corona virus latest