ஆட்டோக்களில் இல்லம் தேடி வரும் சித்த மருத்துவம்.. துவக்கி வைத்த அமைச்சர்.!!
Minister Jeyakumar Latest press meet 27 may 2020
தமிழகத்தில் கரோனா வைரஸின் தாக்கமானது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தினமும் சென்னையில் கொரோனா பாதிப்பு அதிதீவிரமாக மாறி, சுமார் 11 ஆயிரம் பேர் சென்னையில் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 18 ஆயிரத்தை கடந்துள்ளது.
சென்னையில் உள்ள மாநகராட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், தமிழக அரசு கொரோனா தடுப்பு நடவடிக்கையை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.
சென்னையில் குறுகிய இடத்தில மக்கள் அதிகளவு வசித்து வருகின்றனர். மக்கள் குறைந்த இடத்தில் அதிகளவு வாழ்ந்து வருவதால், கொரோனா தொற்று பரவல் அதிகமாக இருக்கிறது. சென்னை மக்களுக்கு தேவையான அனைத்து உதவியும் செய்யப்பட்டு வருகிறது. கிட்டத்தட்ட 450 க்கும் அதிகமான கட்டுப்பட்டுத்தப்பட்ட பகுதிகள் இருக்கிறது.
மக்களுக்கு ஆங்கில மருத்துவ சிகிச்சைகளும், சித்த மருத்துவ முறைகளில் கபசுர குடிநீர் போன்றவை வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மக்களுக்கு ஆட்டோ மூலமாக கபசுர குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
Tamil online news Today News in Tamil
English Summary
Minister Jeyakumar Latest press meet 27 may 2020