நம்ம அமைச்சர் ஜெயகுமாரா இது.?! வைரலாகும் சென்னை விபத்து காணொளி!
minister jeyakumar help to bike accident person
சென்னை துறைமுகம் அருகே இரண்டு இரு சக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்டு விபத்துக்குள்ளாகியது. இதில் ஒரு இருசக்கர வாகனத்தில் வந்த நபர் தூக்கி வீசப்பட்டு அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
அந்நேரம் அவ்வழியாக வந்த தமிழக மீன்வளத்துறை அமைச்சர் டி ஜெயக்குமார் அவர்கள், இந்த விபத்து சம்பவத்தை நேரில் பார்த்த உடன், தனது காரை விட்டு இறங்கி இருசக்கர வாகன விபத்தில் காயமடைந்த நபரை சாலையோர நடைபாதையில் வைத்து முதல் உதவி செய்தார்.
பின்னர் ஆம்புலன்சை வரவழைத்து காயமடைந்த நபரை ஏற்றி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தார். காயமடைந்த நபருடன் அருகில் இருந்த ஆட்டோ ஓட்டுநரை வரவழைத்து, அந்த நபரைப் பார்த்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டு, அவரையும் வந்த ஆம்புலன்சில் அனுப்பி வைத்தார்.
பின் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தி, காவல் துறைக்கு இந்த விபத்து சம்பவத்தை விவரித்தார். இதனையடுத்து அமைச்சர் ஜெயக்குமார் தனது காரில் புறப்பட்டார். அமைச்சர் ஜெயக்குமார் அவர்களின் இந்த மனித நேயப் பண்பு செயல், அங்கிருந்த பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது. இது குறித்த காணொளி இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது.
English Summary
minister jeyakumar help to bike accident person