சாலையில் பட்டினியால் தவித்த முதியவர்! காரை நிறுத்திய அமைச்சரின் செயலால் குவியும் பாராட்டுக்கள்!!
Minister jayakumar help to Orphan old man
சென்னை துறைமுகம் பகுதியில் இருக்கும் சென்றுவிட்ட தனது காரில் வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தார் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார்.
அப்பொழுது சாலையின் ஓரத்தில் ஆதரவற்ற 80 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் உணவின்றி தவித்துக் கொண்டிருந்தவருக்கு அமைச்சர் ஜெயக்குமார் முக கவசம் உணவுக்கு பணமும் கொடுத்துள்ளார்.
காரில் சென்று கொண்டிருந்த அமைச்சர் ஜெயகுமார் தெருவில் உணவின்றி அமைந்த இருந்தவரை பார்த்தவுடன் காரை நிறுத்த கூறி உடனே கீழிறங்கி அவருக்கு பாதுகாப்பிற்காக மாஸ்க், உணவு, தண்ணீர் வழங்கி பயன்பாட்டிற்கு ஒரு சால்வையும் கொடுத்துள்ளார்.
பின்னர் மாநகராட்சி அதிகாரிகளுக்கு முதியவர் குறித்த தகவலை தெரிவித்து காப்பகத்தில் சேர்க்க உத்தரவிட்டுள்ளார். அமைச்சரின் உத்தரவின் பேரில் அதிகாரிகள் விசாரணை நடத்தியதில் அந்த முதியவர் திருநாவுக்கரசு என்பதும் அவர் ஐசிஎஸ் பகுதியை சேர்ந்தவர் என்று தெரிய வந்துள்ளது. அமைச்சரின் இந்த செயலுக்கு சமூக வலைத்தளங்களில் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
English Summary
Minister jayakumar help to Orphan old man