"இன்ஸ்டன்ட் சாம்பாரு"..மாணவர்களிடம் பேசிய கமலை சீண்டிய மீன்.!  - Seithipunal
Seithipunal


கடந்த சில நாட்களுக்கு முன்னர் சென்னை லயோலா கல்லூரியில் மாணவர்களுடன் பேசிய கமல், வளரும் தலைமுறையினர் அரசியல் பேசுவதில் இருந்து ஒதுங்க கூடாது. 

அரசியல் பேசாவிட்டால் கல்வி, விவசாயம் முன்னேறாது. "கரை வேட்டி கட்டியவர்கள் பார்த்துக் கொள்வார்கள் என்று மாணவர்கள் ஒதுங்கி நிற்பதால்தான் அரசியலில் கறை படிந்துள்ளது". மேலும், வாரிசு அரசியல் சரியில்லை என்று தான் ஜனநாயகம் வந்தது. ஆனால் தமிழக அரசியலில் குடும்ப அரசியலைப் பிரிக்க முடியாது” என கூறி மாணவர்களின் சில கேவிகளுக்கு பதிலளித்திருந்தார். 
 
இந்த நிலையில் தற்போது கமல் ஹாசனின் இந்த பேச்சு குறித்து பதிலளித்துள்ள மீன்வளதுறை அமைச்சர் அமைச்சர் ஜெயக்குமார், கமல் இன்ஸ்டன்ட் சாம்பார். ஃபுட் மாதிரி திடீரென கருத்து கூறுவார், திடீரென காணாமல் போவார். 

தேர்தல் நேரத்தில் மட்டும் வந்து கருத்து சொல்லிவிட்டு பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு சென்றுவிடுவார். பிக்பாஸ் நிகழ்ச்சி ஒரு கலாச்சார சீரழிவு, அது அலிபாபா குகை போல் இருக்கும் அந்த வீட்டில் என்ன நடக்கும்னு தெரியாது,

வீட்டிலிருப்பவர்களும் பயந்து ஓடி வருகின்றனர். மேலும், தான் நடித்த வசூல் ராஜா MBBS படத்தின் மூலம்  நீட் தேர்வில் ஆள் மாறாட்டத்திற்கு வித்திட்ட கமல்ஹாசன் கல்லூரிகளில் மாணவர்கள் மத்தியில் அரசியல் பேசுவது தவறு என்று கூறியிருக்கிறார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

minister jayakumar about kamal hassan


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->